May 5, 2008-அன்று தொடங்கும் வாரத்தின் நட்சத்திரம்
முனைவர்.நா.கண்ணன் பழைய இராமநாதபுர
மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூவணம்
என்ற கிராமத்தில் பிறந்து அங்கேயே
பள்ளி இறுதிவரை தமிழ் மொழியில்
கற்றவர். எனவே தமிழ் மொழி முதல் மொழி
என்பது இவருக்கு இயல்பாக
அமையப்பெற்ற ஒன்று. பின் மதுரை
அமெரிக்கன் கல்லூரியிலும், மதுரைப்
பல்கலைக் கழகத்திலும் உயர் கல்விப்
பட்டங்கள் பெற்று, மேற்கல்விக்கு
ஜப்பான் சென்றார். அங்கிருந்து பின்
ஜெர்மனிக்கு வேலை நிமித்தம்
இடப்பெயற்வுற்று நீண்ட நாட்கள்
அங்கே பேராசிரியராக வேலை செய்து
அந்நாட்டுக் குடியுரிமை பெற்றார்.
தற்சமயம் ஒரு சிறப்பு அழைப்பின்
பெயரில் கொரியாவில் ஆசிய பசிபிக்
நாடுகளின் கடலாய்வு பயிற்சி மையத்தை
பரிபாலித்து வருகிறார்.
தமிழ்க் கவிதைகள் எழுதத்தூண்டியது
அமெரிக்கன் கல்லூரியின் சூழல்
என்கிறார் நா.கண்ணன். ஆய்வுப்
பொழுதுகள் போக மீதமிருக்கும்
நேரங்களில் மதுரைப் பல்கலைக்
கழகத்தில் சிறுகதைகள்
எழுதத்துவங்குகிறார் நா.கண்ணன்.
இவரது வெளியீடுகள் குங்குமம்,
கணையாழி, சுபமங்களா, இந்தியாடுடே
போன்ற இதழ்களிலும் பல புகலிட
இதழ்களிலும் (இங்கிலாந்து, பிரான்சு,
ஜெர்மனி) வெளி வந்திருக்கிறது. புகலிட
வாழ்வியல் தரும் மயக்கத்தை தமிழ்
மரபின் வழி புரிந்து கொள்ள முயலும்
இவரது புனைக்கதைகள் மெய்நிகர்
தொழில்நுட்பத்தை இணைத்து நிழல்வெளி
மாந்தர்களை உருவாக்கியுள்ளது.
இதுவரை மூன்று சிறுகதை/நீண்ட கதைகள்
கொண்ட தொகுப்புகளை
வெளியிட்டுள்ளார். இவரது நூற்றுக்
கணக்கான கவிதைகள் இன்னும் இணையப்
பரப்பிலேயே தவழ்கின்றன.
தமிழின் முதல் மடலாடற் குழுவில்
தமிழ்ப் பாசுரங்கள் பற்றி எழுதப்
போய் இப்போது அதுவே மோட்ச சாதனம்
என்றாகிவிட்டது இவருக்கு. தமிழ்
இலக்கியங்களின் பயன், அறிவின் பயன்
இவை நாரணனை அறிதலே என்று நம்புகிறார்.
தொடர்ந்து இணைய உலகில் பங்காற்றி
வரும் இவர் தமிழ் மரபு அறக்கட்டளை
எனும் அமைப்பிற்கான தலைமைப்
பொறுப்பை ஏற்று நடத்துகிறார்
(http://www.tamilheritage.org). இவர் கவினுலகம்
(http://emadal.blogspot.com/), மூன்றாம் கண்
(http://photo-view.blogspot.com/), ஆழ்வார்க்கடியான்
(http://thirumozi.blogspot.com/), நா.கண்ணன் கவிதைகள்
(http://kavithai.rediffblogs.com/) போன்ற வலைப்பதிவுகளை
வெளியிட்டுவருகிறார். மின் தமிழ்
(http://groups.google.com/group/minTamil) எனும் குழுமத்தை
மட்டுறுத்தி வருகிறார். தமிழின் மீது
ஈடுபாடும், இலக்கிய ஆர்வமுமுள்ள
நா.கண்ணன் ஒரு உண்மையான
உலகக்குடிமகன். இவர் கால் வைக்காத
கண்டமில்லை.
கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்
![]() |
![]() |
|
|
| அப்பு சிவா | ![]() |
![]() |
|
| nayanan | ![]() |
![]() |
|
| கிவியன் | ![]() |
![]() |
|
| அனுசுயா | ![]() |
![]() |
|
![]() |
![]() |
|
|
| SP.VR. SUBBIAH | ![]() |
![]() |
|
| kannabiran, RAVI SHANKAR (KRS) | ![]() |
![]() |
|
| Dubukku | ![]() |
![]() |
|
| வினையூக்கி | ![]() |
![]() |
|
| Vasudevan Letchumanan | ![]() |
![]() |
|
| இராம.கி | ![]() |
![]() |
|
| கைப்புள்ள | ![]() |
![]() |
|
| கோ.சுகுமாரன் | ![]() |
![]() |
|
![]() |
![]() |
|
இந்த வார நட்சத்திர இடுகைகள்
எனது ஆய்வகத்திலே பல பெண் விஞ்ஞானிகள் தாமதமாக பிள்ளை பெற்றுக் கொள்கின்றனர். காரணம் Ph.D முடித்து, பின் வேலை கிடைத்து நிம்மதியாக வாழ்வு அமைந்து பிள்ளை பெற்றுக் ... மேலும்
0 மறுமொழிகள்
சரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை!
3 மறுமொழிகள்
நான் நட்சத்திரப் பதிவாளனாகின்ற நேரத்தில் 1 லட்சம் மக்கள் பர்மாவில் உயிரிழந்துள்ளனர் எனும் சேதி இன்றுதான் எனக்குத் தெரியவந்தது! வங்காள விரிகுடாவில் உருவான புயல் மணிக்கு 190 ... மேலும்
0 மறுமொழிகள்
கிராமத்தில் வாழ்ந்தவன் என்பதால் எனக்கு வயலும் வாழ்வும் என்பது புதியன அல்ல. கோடை விடுமுறை வந்துவிட்டால் கிராமத்துப் பம்பு செட்டுக்குப் போய் கும்மாளம் போடுவதும், பெரிய கமலைக் ... மேலும்
7 மறுமொழிகள்
சென்ற வாரம் அமெரிக்கா வழியாக பெரு சென்ற போது போப் ஆண்டவர் (ஜான் பால் II) அமெரிக்கா வந்திருக்கும் செய்தி எல்லாப் பத்திரிக்கைகளிலும் ... மேலும்
10 மறுமொழிகள்
திரு. பாலு மணிமாறன் 20 சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து "வேறொரு மனவெளி" என்ற புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். புத்தக வெளியீடு சமீபத்தில் திரைப்பட ... மேலும்
5 மறுமொழிகள்
என்னடா! கடலே! கடலே!ன்னு எழுதிவிட்டு வெங்காயச் சாகுபடி பற்றி எழுதுகிறேனே என்று எண்ணுகிறீர்களா? புதன் கிழமை முழுவதும் ஆய்வகத்திற்கு அருகிலுள்ள வயக்காட்டில் வெங்காயம் பிடுங்கினேன்! என்ன இது? ... மேலும்
13 மறுமொழிகள்
ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வசதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏற்பாடு என்றொரு செய்தியை வாசித்தேன். ஜெர்மனியில் வாழ்ந்த காலங்களில்தான் இந்த மிகப்பெரிய ... மேலும்
12 மறுமொழிகள்
மனிதன் எவ்வளவு உடலியல் பிராணியோ அவ்வளவு உளவியல் பிராணியும் கூட. அதாவது மனிதனுக்கு உறைவிடமும், உணவும் கிடைத்துவிட்டால் போதும் வாழ்வு என்றில்லை. அது விலங்குகளுக்குச் சரி. மனிதனுக்கில்லை! ... மேலும்
11 மறுமொழிகள்
கடல் நம் மூத்ததாய். இது பலருக்குத் தெரியாது. காற்றை சுவாசித்துக் கொண்டு, தரையில் நடைபோடும் மானுடப் பிறவி கடலிலிருந்து வந்தது என்றால் யார் தான் நம்புவர்? குரங்கிலிருந்து ... மேலும்
5 மறுமொழிகள்
தமிழில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது! என்பார்கள். உண்மைதானே! உருவத்தில் சிறிதாக வாமனன் வருகிறான். தன் பிஞ்சுக்கால்களால் மூன்றடி கேட்கின்றான். இது ஒரு யாசகமா? என்றெண்ணி ... மேலும்
6 மறுமொழிகள்
இன்று நானொரு நட்சத்திரம்! நன்றாகத்தான் இருக்கிறது! யாருக்குத்தான் நட்சத்திர அந்தஸ்து பிடிக்காமல் இருக்கிறது? நட்சத்திரம் என்னும் போது எல்லோரும் பார்க்கிறார்கள். பார்க்கும் போது கவனிக்கப்படுகிறோம் எனும் மகிழ்ச்சி. ... மேலும்
24 மறுமொழிகள்
|
Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com. If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email
Managed by Tamil Media International L.L.C..
|



